தன்னை நம்பிய உயிர்களுக்காக...கடைசி வரை போராடிய ஓட்டுனர் - ஓடி வந்து காப்பாற்றிய காவலர்

x

அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் 54 வயது மகேஷ் ராஜா... திருச்செந்தூரில் இருந்து திருச்சி செல்வதற்காக அரசு பேருந்தானது மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த போது பந்தல்குடி அருகே புறவழிச்சாலையில் ஓட்டுநர் மகேஷ் ராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவர் பேருந்தை நிலைதடுமாறி ஓட்டி வந்த நிலையில், பேருந்தின் பின்னால் வந்து கொண்டிருந்த மதுரை ஆயுதப்படை பணியில் பணிபுரியும் கனகராஜ் என்பவர் இதைக் கண்டுள்ளார். ஓட்டுநர் மகேஷ் ராஜா இருக்கையிலேயே மயங்கி விழுந்த நிலையில், நடத்துனர் திருப்பதி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார்... தொடர்ந்து பேருந்தில் ஏறிய கனகராஜும் நடத்துநரும் இணைந்து பேருந்தை நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில், அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். பேருந்தில் வந்த 62 பயணிகளும் உடனடியாக மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். நடத்துநர் மற்றும் ஆயுதப்படை காவலரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்