வரதட்சணையாக கப்பல் வேலை வாங்கி தந்தும் தீராத பேராசை.. கருவை கலைக்க மிரட்டல் - உடைந்த கையுடன் கதறும் காதல் மனைவி

x
  • வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்ததாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, உடைந்த கையுடன் பெண் புகார் அளித்துள்ளார்...
  • சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் பிரவீன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
  • இதனிடையே புவனேஸ்வரியின் பெற்றோர் 40 சவரன் நகை, வீட்டிற்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்து, பிரவீனுக்கு கப்பலில் வேலையும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் 100 சவரன் நகை, கார் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டும், கர்ப்பமாக இருந்தபோது கருவை கலைக்க சொல்லியும், கணவன், மாமியார் மற்றும் மாமனார் சித்திரவதை செய்வதாக புவனேஸ்வரி புகார் தெரிவித்த நிலையில், போலீசார் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
  • இதனிடையே, பிரவீன் தனது மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, புவனேஸ்வரி தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்