கணவன் நடத்தையில் சந்தேகம்... மனைவி நிகழ்த்திய கொடூரம்... அதிர வைத்த சம்பவம்...!

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, குடும்பத் தகராறில், இரும்பு கம்பியால் கணவன் தலையை தாக்கிக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம் அடுத்த உரியூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சீராளன் - சோபனா தம்பதிக்கு இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆவேசம் அடைந்த மனைவி சோபனா, அருகில் இருந்த இரும்பு கம்பியைக் கொண்டு, சீராளன் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சீராளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துனர். கணவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மனைவி சோபனா, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் தக்கோலம் போலீசார், சோபனாவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், கணவனின் நடத்தை மீதான சந்தேகத்தால், கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்