அரசியல் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம்".. எம்ஐடி பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின்..MK Stalin |Politics

x

சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர், கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும், தமிழ்நாட்டு மாணவர்கள் அறிவாற்றலில் முதல் இடத்தை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். எம்ஐடியில் அதிநவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்ட 50 கோடி ரூபாயும், கற்றல் வளாகம் மற்றும் பவள விழா பூங்கா அமைக்க 25 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் எம்ஐடி வளாகத்தில், 1,000 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெரிய அரங்கம் அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்