யாருக்கும் சொல்ல வேண்டாம்.. பாதி விலைக்கு தங்கம் - மர்மநபர் பேசும் வைரல் ஆடியோ

x

கர்நாடகாவில், தங்க புதையல் கிடைத்துள்ளதாகவும், அதனை பாதி விலைக்கு தருவதாகவும் கூறி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவரிடம் மர்மநபர் செல்போனில் உரையாடும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாணியம்பாடியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசும் நபர், தனது பெயர் ரமேஷ் என்றும், கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய முதியவர் ஒருவர், வீடு கட்டும் பணிகள் மேற்கொண்டபோது, 6 கிலோ தங்க நாணயம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் புதையலாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுவேண்டுமென்றால், தான் கூறும் இடத்திற்கு வந்து பாதி விலைக்கு தங்கத்தை வாங்கிச் செல்லுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.

இதேபோல், பல்வேறு நபர்களுக்கும் இந்த அழைப்பு வந்துள்ளதால், இதுகுறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்