சாக்கடையில் சிக்கித் தவித்த குட்டிகள்..உதவிக்கு அலைந்த தாயுள்ளம்..ஓடி வந்து காப்பாற்றிய வீரர்கள்

x

திருப்பூர் மாவட் டம், பல்லடம் அடுத்த கே.என்.புரம் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாக்கடையில் 15 நாட்களாக சிக்கித் தவித்த, நாய் குட்டிகளை மீட்டுள்ள, நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், சாக்கடையில் இருந்த 6 நாய் குட்டிகளை பொதுமக்கள் மீட்டுள்ளனர். நாய் குட்டிகள் தானே என எண்ணாமல், உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்