"முன்விரோதத்தால் இப்படியுமா நடக்கும்" - இளைஞர் கால் உடைத்து கொலை மிரட்டல்

x

கன்னியாகுமரி அருகே முன் விரோதம் காரணமாக, டிப்ளமோ இன்ஜினீயர் கால்களை உடைத்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த டார்வின் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில், டார்வினின் இருசக்கர வாகனத்தை அஸ்வின்குமார் தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது. இதனால், டார்வின் உள்பட 7 பேர் சேர்ந்து அஸ்வின் குமாரின் கால்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்