"சத்தமாக பிரார்த்தனை செய்தால் தான் அல்லாவுக்கு கேட்குமா?" - EX பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

x

ஒலிபெருக்கி வாயிலாக மிக சத்தமாக பிரார்த்தனை செய்தால்தான் அல்லாவுக்கு கேட்குமா என கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மங்களூருவில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உரையாற்றினார். அப்போது திடீரென பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து இஸ்லாமியர்களின் பிரார்த்தனைக்கான அழைப்பான பாங்கு, ஒலித்தது. இதைக்கேட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் வேண்டுமென்றே செய்வதாகவும், கூடிய விரைவில் இதற்கு முடிவு கட்டப்படும் என்றார். இவ்வாறு சத்தமாக பிரார்த்தனை செய்தால் தான் அல்லாஹ்வுக்கு கேட்குமா என கேள்வி எழுப்பினார். மோடி அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியது இவர்கள் தவறாக புரிந்து வைத்துள்ளதாக கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்