"இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருப்பதே இல்லை" - அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

x

சீர்காழி அருகே அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுவதாக அதிமுக கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.

சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம், பொறுப்புத் தலைவர் பானு சேகர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர் ஒருவர், நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்றும், இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு சென்ற நோயாளி ஒருவர், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்