வேலை வேணுமா.நான் பெரிய ஆபீசரு.டெய்லி ரூ3000 வாங்கி தரேன் 4 பேரிடம் 1.5 லட்சத்த ஆட்டைய போட்ட கில்லாடி

x

நீலகிரியில் அரசு அலுவலகங்களில் பணிபுரிவதாக கூறி, சுமார் ஒன்றரை லட்சம் மோசடி செய்தவரையும், அவருக்கு உதவியாக இருந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் எப்பநாடு பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர், வாடகைக்கு சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்தநிலையில் இவருக்கு அறிமுகமான நபர் ஒருவர், தான் அரசு பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் துறையில் அதிகாரியாக இருப்பதாகவும், பல்வேறு பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டியை எடுத்து செல்ல வேண்டுமென கூறியுள்ளார். இதற்காக ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் வாங்கி தருவதாகவும் கூறிய அந்த நபர், தாலுகா அலுவலகத்தில் முன்பணம் கட்ட வேண்டுமென கூறி 26 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட மேத்யூஸ் என்பவரையும், அவருக்கு உதவியாக இருந்த சாதிக் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 4 பேரிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்