GPay-வில் பணம் அனுப்புறீங்களா..? உஷார் மக்களே உஷார்... - தமிழக காவல்துறை திடீர் எச்சரிக்கை

x

ஆன்லைன் மூலம் விதவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் தமிழக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது G Pay மூலமாக நூதன மோசடி அரங்கேறி வருகிறது என்றும், யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கில் பணம் போட்டு விட்டு அதை நீங்கள் திருப்பி அனுப்பும் போது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே யாரேனும் உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பியிருந்தால் உரிய அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சொல்லுங்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற மோசடி கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்