"கார்ல இருந்து சாவிய எடுக்க உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு?" - டிராபிக் போலீஸ் தன்மானத்தை சீண்டிய நபர்

x

விக்கிரவாண்டி அருகே கார் ஓட்டிய நபர், போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கார் ஒன்று மோதியது. அந்த கார் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரித்த‌தில், அவர் குடிபோதையில் இருந்த‌து தெரிய வந்த‌து. தொடர்ந்து அந்த நபர், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்