"நல்லா பண்ணீங்கப்பா.." எஸ்.பி. கொடுத்த கறி விருந்து...நன்றியோடு உண்டு மகிழ்ந்த காவலர்கள்...

x

நீலகிரியில் கோடை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கறி விருந்து அளித்து பாராட்டு தெரிவித்தார். அங்கு, கடந்த 19ம் தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 23-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், மலர்கண்காட்சியை ஒட்டி, பாதுகாப்பு பணிக்கு வந்த வெளிமாவட்ட மற்றும் நீலகிரி போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கறி, விருந்து வழங்கி உபசரித்தார். இதனிடையே கறி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளருக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்