கர்ப்பிணியுடன் பல்லாங்குழி ஆடிய திமுக எம்எல்ஏ

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில், சமுதாய வளைகாப்பு விழாவை நடத்திய எம்.எல்.ஏ. தமிழரசி, கர்ப்பிணியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 200 கர்ப்பிணி பெண்களுக்கு, எம்எல்ஏ தமிழரசி சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார்.

கர்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம், குங்குமம் மற்றும் வளையல்களை அணிவித்த தமிழரசி, கர்ப்பிணியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்தார்.

பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதனிடையே விழாவில் பேசிய அவர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்