நிகழ்ச்சிக்கு சென்ற திமுகவினர்..ரயில்வே கேட்டை அடைக்கவிடாமல் தடுத்ததால் அதிர்ச்சி - தண்டவாளத்தில் பள்ளி வாகனம்

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற திமுகவினர், ரயில்வே கேட்டை அடைக்கவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில் குமார் உள்ளிட்டோர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். நெல்லை-தாதர் அதிவிரைவு ரயில் வரும் நேரத்தில், கொடைரோடு ரயில்வே கேட் அருகே அவர்களது கார் சென்றபோது, திமுகவினர் ரயில்வே கேட்டை அடைக்கவிடாமல் செய்ததோடு, தொடர்ந்து வாகனங்களை இயக்கினர். பள்ளி வாகனம் ஒன்றும் அப்போது வந்த நிலையில், ரயில் வரும் நேரம் என்பதால், அங்கிருந்த போலீசார் அவசர அவசரமாக வாகனங்களை அனுப்பினர். நல்வாய்ப்பாக பள்ளி வாகனம் ரயில்வே கேட்டை கடந்த பிறகு, அதிவிரைவு ரயில் கடந்து சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்