பெண் அதிகாரியை ஒருமையில் பேசிய திமுக பிரமுகர் - கரூரில் பரபரப்பு

x

கரூரில் பெண் அதிகாரியை ஒருமையில் பேசிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் யுவராணியிடம், தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கேட்டு திமுக பிரமுகர் தங்கதுரை அணுகியுள்ளார். அதற்கு உரிய வரியை செலுத்துமாறு யுவராணி கூறியதற்கு, குறைவான கட்டணத்திற்கு இணைப்பு கேட்டு தங்கதுரை வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஒருமையில் பேசி திட்டியதால், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திமுக பிரமுகர் தங்கதுரை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்