"திமுக கவுன்சிலர் கொலை மிரட்டல்" - மதிமுக கவுன்சிலர் பரபரப்பு புகார்

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக மாமன்ற உறுப்பினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, மதிமுக உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரங்களில், வளர்ச்சி பணிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் சிவகாசி மாநகராட்சியின் பழைய நகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதில், மேயர், துணைமேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மதிமுக மாமன்ற உறுப்பினர் சீனிவாச ராகவனை, திமுக உறுப்பினர் வெயில்ராஜ், ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, சீனிவாச ராகவன் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்