சிறுமிக்கு கடலை மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை..ரவுண்ட்ஸ் வருவதாக கூறி தினமும் அத்துமீறல் - போக்சோவில் கைதான பள்ளியின் தாளாளரான திமுக கவுன்சிலர்

x
  • மழலை மொழி பேசும் 5 வயது சிறுமி... நஞ்சில்லா பிஞ்சை மிட்டாய் கொடுத்து அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் சட்டப்பேரவை வரை எதிரொலித்திருக்கிறது...
  • பலமுறை மிட்டாய் வாங்கி கொடுத்து இப்படி எல்லாம் செய்தார் என அந்த சிறுமி சொன்னதை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் பெற்றோர்...
  • சிறுமியின் நடத்தையிலும், உடலிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு மருத்துவமனை அழைத்து சென்ற பெற்றோரின் தலையில் பேரிடியாக விழுந்திருக்கிறது இந்த செய்தி...
  • கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது தனியார் நர்சரி பள்ளி... அங்கு ஏராளமான சிறுவர்கள் படித்து வருகின்றனர்...
  • இந்த பள்ளியில் படித்து வந்த ஐந்து வயது சிறுமி ஒருவரின் நடத்தையில் லேசான மாற்றம் கண்ட அவரது பெற்றோர், திடீரென ஒரு நாள் சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர்...
  • அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும், பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என தெரிவித்ததை கேட்ட பெற்றொர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்...
  • உடனே, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியிடமும், அவரின் பெற்றோரிடமும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்...
  • இந்த விசாரணையில் போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது....
  • விருத்தாச்சலம் 30 ஆவது வார்டின் திமுக கவுன்சிலரான பக்கிரி சாமி என்பவர் சிறுமி படித்து வரும் பள்ளியின் தாளாளராக பொறுப்பு வகித்து வருகிறார்...
  • சிறுமி தினமும் பள்ளிக்கு வரும் போது, அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது, அவ்வப்போது தனியே அழைத்து சென்று பாலியல் ரீதியாக சீண்டுவது என சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்...
  • இதில், சிறுமிகள் தினமும் பள்ளிக்கு புத்தகப் பைகளை எடுத்துவருவது போல, கவுன்சிலரும், பள்ளி தாளாளருமான பக்கிரிசாமி தினமும் கடலை மிட்டாய்களை பள்ளிக்கு வாங்கி வந்துள்ளார்..
  • பள்ளி தாளாளர் என்ற முறையில் பள்ளியை ஒரு ரவுண்ட் விசிட் அடிப்பது போல் சுற்றி வரும் பக்கிரிசாமி, பள்ளியின் வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு கடலை மிட்டாய் கொடுத்தும், இன்னும் நிறைய தருகிறேன் வா என கூறி தனது அறைக்கு அழைத்து சென்றிருக்கிறார்...
  • இனிப்பான மிட்டாய் கிடைக்கப்போகிறது என ஆசையாக சென்ற சிறுமிக்கு அங்கு நடந்ததெல்லாம் கேட்போரை பதற வைக்கும் சம்பவம்...
  • இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும் பள்ளி தாளாளரும், கவுன்சிலருமான பக்கிரிசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்... அதேநேரம் அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலளார் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்...
  • இதையடுத்து, இந்த விவகாரம் தமிழக சட்டபேரவை வரை எதிரொலித்த நிலையில், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.....
  • இதற்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பள்ளி மாணவிகளுக்கு சாக்லேட் கொடுத்து அத்துமீறியதாக பள்ளியின் தாளாளரின் கணவர் காமராஜ் கைது செய்யப்பட்டார். அப்போது தாளாளர் அறையின் பீரோவின் மேல் இருந்த சாக்லேட் டப்பாக்களே பார்ப்போரை பதற வைத்தது...
  • கள்ளம் கபடமில்லாத பிஞ்சுகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் இவரைப்போன்றவர்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த தவறு இனி நடக்காது...

Next Story

மேலும் செய்திகள்