சொந்த மகளை கொன்ற தாய்... கணவருடன் நடந்த சோகம் ...திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை ...

x

நாமக்கலில் மகளை கொன்று, கணவருடன் சேர்ந்து கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கவுன்சிலரின் மூத்தமகள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் அருண். இவர் நகைக்கடை நடத்தி வரும் நிலையில், இவரின் மனைவி தேவிப்பிரியா 13-ஆவது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வந்தார். தம்பதி இருவரும் 12 ஆம் வகுப்பு படித்து வந்த தங்களின் இளையமகளை ரோஷ்மில்க்கில் விஷம் கலந்து கொடுத்து கொன்று, தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தம்பதியின் மூத்தமகள் ரித்திகா ஸ்ரீயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று தனது குடும்பத்தினர் தன்னிடம் செல்போனில் பேசியதாகவும், தன்னுடைய வங்கி கணக்கில் நாற்பதாயிரம் ரூபாய் பணம் அனுப்பி, நீ நன்றாக வாழவேண்டுமென தனது தந்தை கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்போது பேசிய தனது தங்கை, தந்தை வாங்கி கொடுத்த ரோஷ்மில்க்கில் ஏதோ கலந்திருப்பதாக அவர் தெரிவித்தபோது, தந்தை போனை பிடுங்கி விட்டதாகவும் தெரிவித்த நிலையில், இந்த தற்கொலை சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்