மாமல்லபுரத்தில் உற்சாகமாக தீபாவளி கொண்டாடிய பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள்

x

மாமல்லபுரத்துக்கு வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள், அங்கு ஒட்டலில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடினர்.

மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 5 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனர்.

அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு, தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவர்கள் தங்கி உள்ளனர்.

இன்று மாமல்லபுரம் தெருக்களில் தீபாவளியை கொண்டாடும் வகையில், பிரான்ஸ் நாட்டு பெண்கள் 5 பேரும் பட்டாசு வெடித்தும், புஸ்வானம், சுறுசுறு கம்பி கொளுத்தியும் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்