குடும்ப பிரச்சினையால் மன உளைச்சல் - கண்ணாடி கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு

x

தேனியில், குடும்பப் பிரச்சினை காரணமாக, பணிபுரிந்த கடையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாழையத்துபட்டியை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர், கண்னாடி கடையில் பணிபுரிந்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், கடையில் இருந்த கண்ணாடியால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனைக் கண்ட சக ஊழியர்கள், சித்திரை செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்