மனைவியை பிரிந்த மன உளைச்சல்... 3 நாட்களாக திறக்கப்படாத வீட்டின் கதவு - சென்னையில் பயங்கரம்

x

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பிரபு, ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் மனைவியை பிரிந்து தாய், தந்தையுடன் வசித்து வந்த நிலையில், திடீரென அவர்களுடன் தகராறு ஏற்பட்டதென்றும், இதனால், அவரது பெற்றோர் வீட்டை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், மன உளைச்சலில் இருந்த பிரபு, தினமும் மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 3 நாட்களாக பூட்டப்பட்டிருந்த பிரபுவின் வீட்டினுள்ளிருந்து துர்நாற்றம் வரவே, அக்கம்பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கை அறையில் பிரபு சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது, உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், காவலர் இறப்பின் மர்மம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்