மேள, தாளங்கள் முழங்க ஊர்வலம் - விநாயகர் சிலைகள் கரைப்பு

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

ராஜபாளையம், விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கரைக்கப்பட்டன.

குடியாத்தம், வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. மேள தாளங்கள் முழங்க எடுத்து செல்லப்பட்ட சிலைகள், ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

செய்யாறு, திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், இந்து முன்னணி சார்பில் 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அவை மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோனேரிராயன் குளக்கரையில் கரைக்கப்பட்டன.

பழனி, திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், விநாயகர் சிலை ஊர்வலத்தில், சிறிய அளவிலான 108 விநாயகர் சிலைகளை பெண்கள் கொண்டு சென்றனர். மேள,தாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்ட பெரிய மற்றும் சிறிய விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்