ராகுல் காந்தி தகுதி நீக்கம் - எல்.முருகன் கருத்து | LMurugan

x

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவில் வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசியும் வழங்கினர். பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தகுதி இழப்பு விஷயம், நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து முழுக்க முழுக்க சட்டப்படி நடைபெற்றுள்ளது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்