தந்தை மகன் இடையே தகராறு - தட்டிக்கேட்ட தலைமை காவலருக்கு அடி - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை அயனாவரத்தில், தட்டிக் கேட்ட தலைமை காவலரை தாக்கிய நபரை, போலீசார் கைது செய்தனர். அயனாவரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ள பிரகாஷ் என்பவர், பிஇ வடக்கு மாட வீதியில் சண்டை நடப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்றுள்ளார். அப்போது, தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் தேவராஜ்க்கு இடையே தகராறு நடந்துள்ளது. அதனை தட்டிக் கேட்ட தலைமைக் காவலர் பிரகாஷை, தேவராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்