இனி மாணவர் சேர்க்கையின் போது இந்த வாக்கியங்களை பயன்படுத்தக்கூடாது - தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

x
  • தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி, நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட திருத்தம், தற்போது அரசிதழில் வெளியாகியுள்ளது...
  • அதன்படி, காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள், இனி மாணவர் சேர்க்கையின்போது பயன்படுத்தப்படாது.
  • பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம், உயர் கல்வி மாணவர் சேர்க்கையின்போதும் இதுபோன்ற பிரிவுகளில் கேள்விகளாக கேட்கப்படுவது தவிர்க்கப்படும் என, அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சட்ட திருத்தத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டே, விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் கோருதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்