கிடா விருந்துடன் சூதாட்டம்... சினிமா பாணியில் சுற்றி வளைத்த போலீஸ் - திண்டுக்கலில் துணிகரம்

x
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கிடா விருந்துடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்த போலீசார் 24 பேரை கைது செய்துள்ளனர்...
  • வேடச்சந்தூர் அடுத்த கருக்காம்பட்டி அருகே கட்டிடம் ஒன்றில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
  • இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு கிடா விருந்துடன் கூடிய சூதாட்டம் நடைபெற்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
  • தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தண்டபாணி என்பவர் கட்டிடத்தில் சூதாட்டம் நடத்தி வந்ததும், ஞாயிற்று கிழமை என்பதால் கிடா விருந்து வைத்து சூதாட்டம் நடத்தியதும் தெரியவந்தது.
  • இதையடுத்து, கும்பலிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

Next Story

மேலும் செய்திகள்