திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி.
இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மலைப்பகுதி முழுவதும் விவசாய சார்ந்த பகுதியாக உள்ளது.
இப்பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.15 மணிக்கு அரசு பேருந்து சிறுமலை நோக்கி சென்றது.
பேருந்து சிறுமலையை நோக்கிச் சென்ற போது சிறுமலை 18 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு மற்றும் தூரல் காரணமாக சாலை முற்றிலும் தெரியவில்லை.
இதன் காரணமாக பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் காயமடைந்த அனைவரும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.
விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்