மழைக்கு தானாக வெளி வரும் வைரக்கற்கள்..வயலில் அமர்ந்து வைரத்தை தேடும் விவசாயிகள்-தீயாய் பரவும் வீடியோ

x

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 30 கேரட் வைரத்தை தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றி, அதை 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில், மழைக்கு பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டில் விவசாயி ஒருவர் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரத்தையும், 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் 2 விலைமதிப்புள்ள வைரக் கற்களையும் கண்டுபிடித்து உள்ளூர் வணிகர்களிடம் நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. வைர கற்களை எடுப்பதற்காக, சிலர் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு, வயல் வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைர கற்களை தேடி வருகிறார்கள். இந்நிலையில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டுபிடித்ததாகவும், அதை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்