ஒருபுறம் தோனி.. மறுபுறம் ரோகித்.. பறக்கும் சிக்சர்கள், ஃபோர்கள்..

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மும்பை வீரர் இஷான் கிஷன், பதீரனா மீது மட்டும் தனி கவனம் செலுத்தாமல் சென்னை அணியின் எல்லா பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சென்னை அணியின் பந்து வீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ், சூழலைப் பொறுத்து யாருக்கு எதிராக யாரை பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்