அரசியலில் தோனி - ஆனந்த் மகேந்திரா பரபரப்பு ட்வீட்

x

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து, அணியின் கேப்டன் தோனி, ரசிகர்களின் அன்புக்காக தான் இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். தோனியின் விருப்பத்திற்கு அவரது ரசிகர்களின் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகேந்திர குழும தலைவர் ஆனந்த மகேந்திரா, தோனியின் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், எனினும் தோனி அரசியலில் களம் காண வேண்டுமென தான் விரும்புவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டாவின் தலைமையிலான என்.சி.சி ஆய்வுக் குழுவில், தோனியுடன் தான் பணியாற்றியதையும் ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்