இரவு விருந்தின்போது தோனி அழுதார் - ஹர்பஜன் சிங்

x

தடைக்கு பின் ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி திரும்பியபோது, அணியின் கேப்டன் தோனி உணர்ச்சிவசப்பட்டு அழுததாக சென்னை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். தொலைக்காட்சி வர்ணனையின்போது பேசிய அவர், 2 ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை அணி ஐபிஎல் தொடருக்கு திரும்பியபோது நடைபெற்ற இரவு விருந்தில், தோனி அழுததாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறினார். அப்போது அருகிலிருந்த மற்றொரு முன்னாள் சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர், தோனியை அவ்வாறு பார்த்தபோது சென்னை அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை உணர்ந்துகொண்டதாகவும், தோனி சென்னை அணியை தனது குடும்பமாக கருதுவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்