கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?- சோதனை நடத்தி பணம் ஈட்டிய கும்பல்... தர்மபுரியில் அரங்கேறிய பகீர் சம்பவம்

x
  • தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே சட்ட விரோதமாக பாலினம் கண்டறியும் சோதனைகள் செய்து, பணம் ஈட்டி வந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • மொரப்பூரை அடுத்த வகுத்தானூரில் வசித்து வரும் சாக்காமல் என்கிற புஷ்பவதி என்பவர், அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
  • இவர், கொரோனா காலத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல் இருந்தார்.
  • ஒராண்டுக்கு முன்பு, இவருக்கு கேசசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த டிப்ளோமா பார்மசி படித்துள்ள கவியரசன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் வடக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், கச்சராபாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் ஆகியோரும் பழக்கமானார்கள்.
  • இவர்கள் 4 பேரும் சேர்ந்து, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்லி பணம் ஈட்டி வருவதாக மொரப்பூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து, புஷ்பவதியின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்கிருந்த பாலின சோதனைக் கருவிகளை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்