கல்லூரி மாணவிகளுக்குள் இடையே காதல்..வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த ஜோடிகள் - காவல் நிலையத்திலே நடந்த அதிர்ச்சி

x

தர்மபுரி அருகே தன் பாலின காதல் விவகாரத்தில், காவல் நிலையத்திற்குள்ளேயே பெண் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம் அடுத்த ஏர்கோல்பட்டியைச் சேர்ந்த 22 வயாதன பொறியியல் பட்டதாரியும், அதேபகுதியை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவிக்கும் தன் பாலின காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெறியேறினர். இது குறித்து பெற்றோர் ஏரியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களை தனி படை போலீஸ் தேடி வந்த நிலையில், திங்கள் கிழமை கோவையில் இருவரையும் மீட்டனர். இருவரிடம் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற 22 வயதான இளம் பெண், பிளேடால் தனது கழுத்து மற்றும் கைகளை அறுத்துக் கொண்டார்.

அவரை மீட்டு போலீசார் பென்னாகரம் அரசு மருத்துவனையில் அனுமதித்தது. பின்னர் பென்னாகரம் குற்றவியல் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவினா,அந்த பெண்ணிடம்,சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்