நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம்... ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருவர் பலி - தருமபுரியில் அதிர்ச்சி

x

பெரியாம்பட்டி அருகே ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், தனது உறவினரான தங்கவேல் என்பவரின் தங்கையை திருமணம் செய்துள்ளார்.

மணிக்கும், தங்கவேலுக்கும் நிலம் தொடர்பாக, கடந்த 20 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது பேத்தியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற மணியை, தங்கவேல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

அப்போது தடுக்க வந்த மணியின் மகனான சேட்டுவையும் அரிவாளால் தாக்கியதில், பதற்றமடைந்த அவர், தனக்கு சொந்தமான டிராக்டரைக் கொண்டு ஏற்றியதில், தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்