கொள்ளையடிக்க வந்த இடத்தில் குறட்டை..! -கோவிலுக்கு கொள்ளையடிக்க போய் குறட்டைவிட்ட காமெடி திருடர்கள்

x
  • கோவிலின் பாசிட்டிவ் எனர்ஜினா இதுதானா..? திருட வந்து மதுபோதையில் தூங்கிய ஆசாமிகள் - எழுந்ததும் போலீசாரிடம் விசாரணை...
  • தர்மபுரி அருகே, கோயிலுக்குள் திருட வந்து, குடிபோதையில் தன்னை மறந்து தூங்கிய ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
  • தர்மபுரி அடுத்த மான்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • aபின்னர் கோவிலுக்குள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு 2 ஆசாமிகள் படுத்துறங்கியுள்ளனர்.
  • தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
  • கோயிலுக்குள் திருட வந்தபோது, நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால், வெளியே வர பயந்து, கோயிலுக்குள் தஞ்சமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
  • எனினும், வேறு எங்கேனும் கைவரிசை காட்டியுள்ளனரா என்பது குறித்து, கைதான இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்