வாகனத்தின் கீழே நின்ற குழந்தை..ஓட்டுநர் கவனக்குறைவால் பறிபோன உயிர் - ஒளிந்து விளையாடியபோது சோகம்

x

வாகனத்தின் கீழே நின்ற குழந்தை..ஓட்டுநர் கவனக்குறைவால் பறிபோன உயிர் - ஒளிந்து விளையாடியபோது சோகம்

தர்மபுரி மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஏறி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பாலக்கோடு அருகே அள்ளிகிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவரின் கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு 1 வயதில் நேகாஸ்ரீ மற்றும் கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. இதில், நேகா ஸ்ரீ சாலையில் விளையாடி கொண்டிருக்கும் போது, அப்பகுதியில் மினி சரக்கு வாகனத்தில் வெங்காய வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது குழந்தை வெங்காய வாகனத்தின் கீழே நின்று கொண்டிருந்ததாகவும், அதை கவனிக்காமல் வாகனத்தை ஓட்டுநர் எடுத்ததால் குழந்தை மீது வாகனம் ஏறியதில் குழந்தை படுகாயமடைந்தது. உடனடியாக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இரண்டு வருடம் முன்பாக கணவரை இழந்த நிலையில், தற்போது மகளையும் இழந்துள்ள தாயின் நிலைமை சோகத்தை உண்டாக்கியுள்ளது. தகவலின் பேரில் வந்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்