டிஜிபியிடம் பாராட்டு பெற்ற பெண் காவலர்

x

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது பெற்ற, தலைமை பெண் காவலரை, டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் தரவுகளை ஆராய்ந்து, அடையாளம் காணப்படாத 19 பிரேதங்களின் அடையாளம் கண்டறிந்தமைக்காக, திருநெல்வேலி குற்ற ஆவண காப்பக தலைமை பெண் காவலர் தங்கமலர் மதிக்கு, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது வழங்கப்பட்டது. இதற்கிடையே, அவரை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்