திருப்பதியில் குவியும் பக்தர்கள் - இதுதான் காரணமா..?

x

கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல இலவச டோக்கன்களைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது... 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். தற்போது வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகில் இலவச டோக்கன்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு அலிப்பிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரவில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து இதைப் பெற்றுச் செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்