ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் வீசி வழிபாடு, கடல் போல் குவிந்த பக்தர்கள்.. கடைலைக்காய் குவியலுக்கு சிறப்பு பூஜைகள்

x

ஒசூரில் புத்தாண்டை முன்னிட்டு, ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் வீசும் விநோத வழிபாடு நடைபெற்றது.

அங்குள்ள ராஜகணபதி நகர் பகுதியில் உள்ள வரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தன்று கடலைக்காய் திருவிழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு நடத்தப்பட்ட கடலைக்காய் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் வீசினர். இதைதொடர்ந்து, குவியலாக வைக்கப்பட்ட கடலைக்காய்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்