மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரை இழுக்கும்போதே பக்தர் மயங்கி உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்

x

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

மாசி பெருவிழாவின் 7ஆம் நாளான இன்று நடைப்பெற்ற தேரோட்டத்தில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது, கூட்டத்தில் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மேலும், இந்த தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்