"கீழேலாம் இறங்கி வர முடியாது" தகாத வார்த்தையால் போலீசை திட்டிய இளைஞர்கள்

x

"கீழேலாம் இறங்கி வர முடியாது" தகாத வார்த்தையால் போலீசை திட்டிய இளைஞர்கள் - குருபூஜையின் போது பரபரப்பு

பசும்பொன்னிற்கு விதிகளை மீறி வாகனத்தில் பயணித்த தேனியை சேர்ந்த18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் கலந்துக் கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பசும்பொன் நோக்கி வாகனங்களில் பொதுமக்கள் வருகின்றனர். தேனியிலிருந்து உசிலம்பட்டி வழியாக பசும்பொன்னிற்கு செல்வதற்காக டெம்போ வேனின் மேல் பகுதியில் நின்றவாறு வாகனத்தில் வந்தவர்களை போலீசார் இடைமறித்து கண்டித்தனர். கீழே இறங்க மறுப்பு தெரிவித்த இளைஞர்கள், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தேனியைச் சேர்ந்த18 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்