தடம் புரண்ட ரயில் பெட்டிகள்... தாறுமாறாக ஓடிய பயங்கரம் - அலறி துடித்த பயணிகள்

x

மும்பை அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

பெலாபூர் மற்றும் கார்கோபர் இடையே இயக்கும் புறநகர் ரயில், கார்கோபர் நிலையம் அருகே காலை 8.46 மணிக்கு வந்த போது தடம் புரண்ட‌து.

4 பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து விலகி தாறுமாராக சென்றதால் பயணிகள் அலறினர்.

நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதையடுத்து, மாற்று பாதையில் மற்றொரு ரயில் இயக்கப்பட்டு, பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்