சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்.. முதலுதவி செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை

x

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்.. முதலுதவி செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். புதுச்சேரியிலிருந்து, தமிழிசை செளந்தரராஜன் காரில் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது, பொத்தேரி பகுதியில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் ரத்த காயத்துடன் கிடந்தார். இதை கண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, இளைஞருக்கு உடனடியாக முதலுதவி செய்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்