"தகுதியுடைய நபர்களுக்கு வாய்ப்பு மறுப்பு" - தி.மு.க எம்.பி. செந்தில்குமார்

x

தருமபுரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர் அணியை பொறுத்தவரை, நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்பவுதாகத் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில், அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும், இதுபோல் நடந்துவிடக் கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை என்றும் செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்