கணவரிடம் இருந்து நகைகளை மீட்டுத்தரக் கோரிக்கை - போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த 2வது மனைவி

x

நகைகளை திருப்பி தராத கணவரை கைது செய்யக்கோரி இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் பூச்சி மருந்து குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதனுக்கு ஏற்கவனே திருமணம் ஆகியிருந்த நிலையில், சசிகலா என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், சசிகலாவின் நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தை தனது முதல் மனைவியிடம் விஸ்வநாதன் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகார் குறித்த விசாரணை ஓட்டேரி காவல்நிலையத்தில் நடைபெற்ற நிலையில், திடீரென பூச்சி மருந்தை குடித்த சசிகலா தனது நகைகளை மீட்டுதராவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்