சைக்கிளில் சென்றாலும் குறித்த நேரத்தில் உணவு டெலிவரி... பட்டைய கெளப்பும் சொமோட்டோ ஊழியர்

x

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பெட்ரோல் விலையேற்றம், குடும்ப வறுமை ஆகிய காரணங்களால் சைக்கிளில் சென்று சொமோட்டோ மூலம் பொருட்களை இளைஞர் விநியோகம் செய்து வருகிறார்.

திருவிக., நகரை சேர்ந்த ராஜதுரை பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர் குடும்ப வறுமை காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக சொமோட்டோ உணவு விநியோகம் செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக இரு சக்கர வாகனங்களை ஊழியர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ராஜதுரை சைக்கிளில் உணவு விநியோகம் செய்து வருகிறார். சைக்கிளில் சென்றாலும் குறித்த நேரத்தில் உணவு வழங்கி விடுவதாக, ராஜதுரை தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். பெட்ரோல் விலை ஏற்றம் மற்றும் குடும்ப வறுமை ஆகியவற்றால், சைக்கிள் தான் எப்போதும் சிறந்தது என ராஜதுரை தெரிவிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்