குட்டிகளை சுமந்த நாயை அடித்து கொன்ற இளைஞர்கள்... குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக தகவல்

x

தென்மேற்கு டெல்லியில் கர்ப்பமாக நாயை அடித்து கொன்ற மாணவர் கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாயை சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதோடு, அதன் உடலை புல் தரையில் தரதரவென இழுத்த சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த வீடியோவை கவனித்த போலீசார், டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்