இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபர்... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞரை பதறாமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்

x

டெல்லியின் கான் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 வயதான ஆகாஷ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் லோக் நாயக் பவன் அருகே இரவு 8 மணியளவில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்