#JUSTIN || டெல்லி வெள்ளம் பாதிப்பு - 144 தடை உத்தரவு | Delhi | section 144 | Yamuna flood

x

கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது... மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள கண்காணிப்பு தரவின் படி பழைய ரயில்வே பாலத்தில் நீர்மட்டம் 207.18 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 206.38 மீட்டரை எட்டிய நிலையில், யமுனை நதி 2வது முறையாக அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பழைய ரயில் பாலம் தற்காலிமாக மூடப்பட்டது. கரையோரம் வசித்து வந்தவர்களின் குடிசைகள் நீரில் மூழ்கின. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், யமுனையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்